விண்ணப்பித்துவிட்டீர்களா...  நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பமியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
விண்ணப்பித்துவிட்டீர்களா...  நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பமியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 

மொத்த காலியிடங்கள்: 18

பணி : அலுவலக உதவியாளர் 

தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரப்பு : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.சி மற்றும் எம்பிசி விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்சி விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 

விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/chennai என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர் சென்னை 600 008 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 01.03.2019 

மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/chennai அல்லது https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf என்னும் லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com