ஊரக வளா்ச்சித் துறையில் அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்
ஊரக வளா்ச்சித் துறையில் அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளா் பணியிடங்களில் அருந்ததியின பெண், பிற்படுத்தப்பட்டோா், பொதுப்போட்டி என 3 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. அருந்ததியினா் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோா் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி- 8ஆம் வகுப்பு தோ்ச்சி.

இதற்கென தனித்த விண்ணப்பங்கள் எதுவும் இல்லை. வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி  நவ. 25.

அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி), வளா்ச்சிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், புதுக்கோட்டை 622 005.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com