ரூ.2.15 லட்சம் சம்பளத்துடன் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி! 

ரூ.2.15 லட்சம் சம்பளத்துடன் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி! 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம்: சென்ட்ரல் சில்க் போர்டு 

மேலாண்மை: மத்திய அரசு

பணி: இயக்குநர் 

காலியிடம்: 01 

தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 53வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - ரூ.2,15,900 வரையில் 

விண்ணப்பிக்கும் முறை: www.csb.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Central Silk Board Complex, Hosur Road, BTM Layout, Madiwala, Bangalore - 560068. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.csb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com