ரயில்வேயில் வேலை வேண்டுமா? சாரணர் பயிற்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்தியன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் பி மற்று டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
ரயில்வேயில் வேலை வேண்டுமா? சாரணர் பயிற்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!


இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்தியன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் பி மற்று டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வேயில் சாரணர் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Group ‘C’ Level 2 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) - 02

பணி: Erstwhile Group ‘D’ Level-1 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) - 06

வயதுவரம்பு: 01.01.20120 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் Scout/Guide 5 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான சாரணர் பயிற்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 2 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.secr.indianrailways.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2019/10/1/SECR-Recruitment-2019-08-Group-C-D-Posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com