ரூ.1.16 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அழைப்பு! 

தமிழக சிறைச்சாலையில் காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
ரூ.1.16 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அழைப்பு! 



தமிழக சிறைச்சாலையில் காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: சிறைக் காவலர் - 01 

தகுதி: குற்றவியல் துறை, குற்றவியல் நீதி நிர்வாகம், சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. ரூ.36,900 - ரூ.1,16,600 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2019 

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.11.2019 

எழுத்துத் தேர்வு நாட்கள் மற்றும் நேரம்: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது. முதல் தாள் 22.12.2019 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். இரண்டாம் தாள் 22.12.2019 அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். 

மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/latest-notification.html என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com