தமிழக அரசிற்கு உட்பட்ட மன நல மருத்துவமனையில் காலியாக உள்ள திட்ட அலுவலர் மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள மனநல மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றந.
பணி: Project Officer (மனநல மருத்துவமனை)
காலியிடம்: 01
தகுதி: எம்.ஏ. சைக்காலஜி, எம்.எஸ்சி சைக்காலஜி, எம்.டி மனநல மருத்துவம் முடித்து குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 முதல் 45 வயதிற்குள்
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - ரூ.1,77,500
பணி: Psychologist
காலியிடம்: 02
தகுதி: மனோதத்துவியல் பிரிவில் முதுகலை பட்டம் மனோதத்துவியல் துறையில் முதுகலைப் பட்டம்
வயது வரம்பு : 28 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 56,100 - ரூ.1,77,500
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக 150, தேர்வுக் கட்டணமாக ரூ.200 என செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டண சலுகைகள் குறித்து அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_26_ProjectOfficerPsychologist.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.10.2019