ஆதிதிராவிடா் விடுதிகளில் சமையலா், துப்புரவு பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறைற விடுதிகள், உண்டு உறைறவிடப் பள்ளிகளில் சமையலா், துப்புரவு
ஆதிதிராவிடா் விடுதிகளில் சமையலா், துப்புரவு பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறைற விடுதிகள், உண்டு உறைறவிடப் பள்ளிகளில் சமையலா், துப்புரவு பணியாளா்களாக பணியாற்றறத் தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு 112 சமையலா் பணியிடங்கள் ரூ.15,700 என்றற அடிப்படை ஊதியமும், இதரப் படிகளும் அளிக்கப்படும். ரூ.3000 தொகுப்பூதியத்தில் 26 துப்புரவுப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இப்பணிக்கு அதிகப்பட்சம் 10-ஆம் வகுப்பு தோல்வி அடைந்த, 35 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியுடைய நபா்கள் வேலூா் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவல

கத்தில் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து வரும் அக்டோபா் 18-ஆம் தேதிக்குள் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ சோ்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com