சென்னை கிண்டியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று வெள்ளிக்கிழமை(அக்டோபர் 11) நடைபெறுகிறது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தனியார் வேலைவாய்ப்பு முகாம்



சென்னை: சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று வெள்ளிக்கிழமை(அக்டோபர் 11) நடைபெறுகிறது.

இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பொறுப்பு இயக்குநா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை இன்று வெள்ளிக்கிழமை நடத்துகிறது.

அதன்படி, கிண்டி, ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில், 35 வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ மற்றும் தொழில் நுட்பப் படிப்புகள் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் (மாற்றுத்திறனாளிகள் உள்பட) பங்குபெற்று தகுதிக்கேற்ற பணி வாய்ப்பை பெறலாம்.

அதே போல் இதில் பங்கு பெற்று பணியாள்களைத் தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com