அரசுப் போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற அழைப்பு

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுவதாக


புதுக்கோட்டை:  அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநர் ஆர். பொன்முடி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் ஆகியவை இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு (இயந்திரவியல், தானியியங்கியல்) 2017, 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு தொழிற் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை அனுப்பவும், மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளவும். இணையதளத்தைப் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்- அக்.21.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com