மத்திய அரசின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் காலியாக உள்ள கிளார்க், கேண்டீன் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 07
பணி: கிளார்க் - 01
தகுதி : பிளஸ் டூ தேர்ச்சியுடன் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கேண்டீர் உதவியாளர் - 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு, திறனறிவு தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.centralexcisetrichy.gov.in என்னும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Additional Commissioner of GST and Central Excise, GST and Central Excise Commissionerate, No.1, Williams Road Cantonment, Tiruchirappalli - 620 001.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.centralexcisetrichy.gov.in/pdf/recruitment-of-clerk-and-canteen-attendants.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 15.02.2020