ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மதுரை கருவூலத் துறையில் வேலை வேண்டுமா?

மதுரை கரூவூலத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மதுரை கருவூலத் துறையில் வேலை வேண்டுமா?

மதுரை கரூவூலத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள்: 06

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 28 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்: மாதம் ரூ.15700 - 50000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூல் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://madurai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
சம்பளக் கணக்கு அலுவலர், சம்பளக் கணக்கு அலுவலகம், 224, தெற்கு வீதி, மதுரை - 625 001

விண்ணப்பத்தைபதிவிறக்கம்செய்ய https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/02/2020021846.pdf என்ற லிங்கில் சென்று பதவிறக்கம் செய்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.03.2020
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com