மத்திய அரசில் வன அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசில் காலியாக உள்ள 90 வன அதிகாரி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)
மத்திய அரசில் வன அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு


மத்திய அரசில் காலியாக உள்ள 90 வன அதிகாரி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான அறிவியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தேர்வு: Indian Forest Service Examination

காலியிடங்கள்: 90

தகுதி: வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், வேதியியல் பொறியியல், வனவியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல்,  விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.08.2020 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தமிழகத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சென்னை, திருச்சி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Notification-IFoSE_2020_N_Engl.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.05.2020

முதன்மைத் தேர்வு 2020 நவம்பர் மாதம் நடைபெறும். இதுகுறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான  கடைசி தேதி: 03.03.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com