மத்திய அரசின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தில் (இபிஎப்ஓ) 'என்போர்ஸ்மென்ட் ஆபிசர், அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள 421 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Enforcement Officer, Accounts Officer
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சட்டம், எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை மட்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் முழுமையைான விவரங்கள் அறிய www.upsc.gov.in/sites/default/files/SplAdvt-51-2020-Engl.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2020