மத்திய அரசின் தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் நிரப்பப்பட உள்ள 421 அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 421
பணி: Enforcement Officer
பணி: Accounts Officer
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இளங்கலை பட்டதாரிகள் முதல் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.25 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in, www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விபரங்கள் அறிய விரும்புவோர் https://www.upsc.gov.in/sites/default/files/Special-Advt-51-2020-R-Engl.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து காணலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2020