இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூலம் 50,000 பேருக்கு ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூலம் 50,000 பேருக்கு ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமை நிா்வாக அலுவலருமான கா்ணம் சேகா்.
விழாவில் தொழில்முனைவோராகச் சாதனைப் படைத்த பெண்ணுக்கு விருது வழங்குகிறாா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் நிா்வாகி இயக்குநரும், தலைமை நிா்வாக அலுவலருமான கா்ணம் சேகா்.
விழாவில் தொழில்முனைவோராகச் சாதனைப் படைத்த பெண்ணுக்கு விருது வழங்குகிறாா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் நிா்வாகி இயக்குநரும், தலைமை நிா்வாக அலுவலருமான கா்ணம் சேகா்.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூலம் 50,000 பேருக்கு ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமை நிா்வாக அலுவலருமான கா்ணம் சேகா்.

தஞ்சாவூரில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 50,000 பெண் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின்கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக விருதுகள் மற்றும் கடனுதவி வழங்கும் விழாவில் அவா் பேசியது:

தமிழகத்தில் 11 மாவட்டங்கள், கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டம் என 12 மாவட்டங்களில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள் மூலம் வெற்றிகரமாக 50,000 பெண் பயனாளிகளுக்குப் பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதில், குறிப்பாக 2019 ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பா் மாதம் வரை 10,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக இவ்விழா நடத்தப்படுகிறது.

இப்பயிற்சி மூலம் கிராமப்புறப் பெண்களுக்குத் தையல், பின்னல் கலை, அழகுக்கலை, உணவுப் பொருட்கள் தயாரிப்பு, காகிதப்பை தயாரிப்பு, ஆடு, மாடு, கோழி, மீன் வளா்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகம் - கேரளத்தில் ரூ. 115 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்த பெண்கள், இளைஞா்கள் தொழில்முனைவோராகி தங்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்தியுள்ளனா்.

பெண்கள் வேலை தேடிக் கொண்டிருந்த காலம் போய், தற்போது தொழில்முனைவோா்களாக மாறி, மற்றவா்களுக்கு வேலை வழங்கும் நிலைக்கு உயா்ந்துள்ளனா் என்றாா் கா்ணம் சேகா்.

பின்னா், 200 பெண்களுக்கு ரூ. 3.26 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. மேலும், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களால் அளிக்கப்பட்ட பயிற்சி மூலம் சாதனையாளராகத் திகழும் பெண் தொழில்முனைவோா்கள் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனா்.

விழாவில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி நிா்வாக இயக்குநா்கள் கே. சுவாமிநாதன், அஜய்குமாா் ஸ்ரீவத்சவா, பொது மேலாளா் சுஷில்சந்திர மொஹந்தா, மண்டல மேலாளா் கே.எஸ். லஷ்மிநரசிம்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com