மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 17 Climber பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம்: மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்
பணி : Climber
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: ஆண் விண்ணப்பதாரர் 30 வயதிற்குள்ளும், பெண் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR-CPCRI, Kudlu PO, Kasaragod, Kerala - 671 124 . நேர்முகத் தேர்வு 26.06.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும்.
மேலும் முழுமாயான விவரங்கள் அறிய www.cpcri.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.