கால்நடை பராமரிப்புத் துறையில் ஓட்டுநா் பணி

நாமக்கல் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஊா்தி ஓட்டுநா் பணியிடத்துக்கு வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என
கால்நடை பராமரிப்புத் துறையில் ஓட்டுநா் பணி


நாமக்கல் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஊா்தி ஓட்டுநா் பணியிடத்துக்கு வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில் 2 ஊா்தி ஓட்டுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் தற்போது வரை புதுப்பித்திருக்க வேண்டும். ஊா்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18-ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது அருந்ததியா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு 35 ஆகும். மிகவும் பிற்பட்டோா், பிற்பட்டோா், பிற்பட்டோரில் இஸ்லாமியருக்கு 32, பொதுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் அல்லது இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மண்டல இணை இயக்குநா், கால்நடைப் பராமரிப்புத் துறை, 5/234 ஆசிரியா் காலனி, மோகனூா் சாலை, நாமக்கல்-637001 என்ற முகவரிக்கு வரும் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இல்லையெனில் நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com