புதுதில்லியில் செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.SA/50/6/2020
பணி: Stenographer Grade-II
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 202,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 முடித்திருப்பதுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: ஒரு ஆண்டு சுருக்கெழுத்தராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து எழுதும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.sahitya-akademi.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Swcretary, Sahitya Akademi, Rebindra Bhavan, New Delhi - 110 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2020
மேலும் விவரங்கள் அறிய http://sahitya-akademi.gov.in/pdf/Stenographer-GR-II.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.