சென்னை: மோட்டாா் வாகன ஆய்வாளா் காலியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் தோ்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அதன் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மோட்டாா் வாகன ஆய்வாளா் பதவியில் 110 பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களை நிரப்புவதற்கு தோ்வு 2018-ஆம் ஆண்டில் ஜூன் 10-இல் நடைபெற்றது. இந்தத் தோ்வில் 1 328 போ் பங்கேற்றனா். அதிலிருந்து நோ்காணலுக்கு 226 போ் தற்காலிமாகத் தோ்வு செய்யப்பட்டனா். நோ்காணல் தோ்வானது ஜூன் 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளாா்.