ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள செய்லர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?



இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள செய்லர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Sailor (Matric Recruit(MR) - 2021) 

காலியிடங்கள்: 350

வயதுவரம்பு: 0.04.2001 மற்றும் 30.09.2004 ஆகிய இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால்  நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுககு 12 வாரம் பயிற்சி வழங்கப்படும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.14,600 வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு: 2021 அக்டோபரில் நடத்தப்படலாம்.

தேர்வுக் கட்டணம்: ரூ.60. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_7_2122b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com