விண்ணப்பித்துவிட்டீர்களா..? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை


இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Cook - 11
பணி: Boot Maker - 02
பணி: Carpenter - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.

பணி: Washerman - 02
பணி: Barber - 06
பணி: Safaiwala - 02

தகுதி: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பணியில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18.000

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அதனுடன் சுய முகவரியிட்ட  கவருடன் ரூ.5-க்கான தபால் தலை ஒட்டி இணைத்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Rajputana Rifles Regimental Centre, Delhi, Cantt-10

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.08.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com