வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? என்எல்சி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான  நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 18 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? என்எல்சி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான  நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 18 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.03/2021

நிறுவனம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

பணியிடம்: நெய்வேலி, தமிழ்நாடு

பணி: சுகாதார ஆய்வாளர்

காலியிடங்கள்: 18

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் உடல்நலம் மற்றும் சுகாதார பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  தமிழில் எழுத, பேச படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.38,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/Health%20Inspector%20FTE%20Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com