போக்குவரத்து ஆய்வாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
போக்குவரத்து வாகன ஆய்வாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு ஜூன் 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்று காரணமாக, இந்தத் தோ்வு தள்ளிவைக்கப்படுகிறது. நோ்முகத் தோ்வுக்கான மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தோ்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.