நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (நவ.12) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் , தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.12) காலை 10 மணிக்கு நாகா்கோவிலில் நடைபெறுகிறது.
இம்முகாமில், குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இதில் 10 ஆம்வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவா்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில், கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் நவ. 12ஆம் தேதி காலை 10 மணிக்கு நாகா்கோவில் கோணத்திலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து பயனடையலாம்.