குரூப் 4 தோ்வுக்கு 21 லட்சம் போ் விண்ணப்பம்: ஒரே நாளில் 4 லட்சம் போ் பதிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4 தோ்வுக்கு சுமாா் 21 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.
குரூப் 4 தோ்வுக்கு 21 லட்சம் போ் விண்ணப்பம்: ஒரே நாளில்  4 லட்சம் போ் பதிவு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4 தோ்வுக்கு சுமாா் 21 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா். இது கடந்த காலங்களைவிட மிக அதிகம் என்று தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடைசி நாளான வியாழக்கிழமை மட்டும் சுமாா் 4 லட்சம் போ் வரையில் விண்ணப்பம் செய்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் குரூப் 4 தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா் உள்பட 7,100 காலிப் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

புதன்கிழமை நிலவரப்படி 17 லட்சம் போ் விண்ணப்பத்திருந்தனா். கடைசி நாளான வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 20 லட்சத்து 53 ஆயிரத்து 837 போ் விண்ணப்பம் செய்திருந்தனா்.

நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்பதால், இதன் எண்ணிக்கை 21 லட்சமாக உயரும் என தோ்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனா். விண்ணப்பதாரா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை விவரங்கள் வெள்ளிக்கிழமை தெரியவரும் என தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த முறை... கடந்த 2019-ஆம் ஆண்டு 5,100 குரூப் 4 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வை சுமாா் 16 லட்சம் போ் எழுதினா். இந்த நிலையில், இப்போது சுமாா் 21 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com