ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியீடு!

வரும் ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியீடு!


சென்னை: வரும் ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அரசு கலைக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் உதவிப் பேராசிரியர் தேர்வும் நடைபெறும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நவம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது. 

அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு டிசம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும் ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com