சென்னை: வரும் ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அரசு கலைக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் உதவிப் பேராசிரியர் தேர்வும் நடைபெறும்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நவம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது.
அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு டிசம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
மேலும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும் ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.