இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 400 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத இளநிலைப் பட்டதாரிகள் ஆன்லைனில் விரைந்து விண்ணப்பிக்கவும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Executive(Air Traffic Control)
காலியிடங்கள்: 400
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 14.07.2022 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: இயற்பியல் அல்லது கணிதப் பாடப்பிரிவை முக்கிய பாடமாகக் கொண்டு பி.எஸ்சி பட்டம் அல்லது பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.81 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வு செய்யப்படும் முறை: விமான நிலையங்கள் ஆணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, ஐசிஏஓ மொழித் தேர்வு திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2022