அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் வேதகிரீஸ்வரர், தாயார் திரிபுரசுந்தரி. தலமரமாக வாழை மரமும், தீர்த்தமாக சங்குதீர்த்தமும் உள்ளன. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய் காட்சியளித்த தலம் இதுவாகும். இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி' எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்