முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயில், தென்திசைக் கைலாயம் என்று அழைக்கப்படடுகின்றது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோயில்களை ஒத்துள்ளது. இக்கோயிலின் பழமையாலும், மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களை பாதுகாக்கும் நோக்குடனும், இக்கோயிலை அரசின் தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வந்துள்ளனர். கோயிலின் சுற்றுச் சுவர் முழுவதும் கருங்கற்களால் ஆன சிற்பங்களும், கோயிலின் உள்ளே சுடுமண் சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களைக் காணக் கண் கோடி வேண்டும். படங்கள்: சென்னை சேவாஸ் பாண்டியன்.