மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அஷ்டமி சப்பர விழாவை முன்னிட்டு, மார்கழியில் அனைத்து உயிர்களுக்கும் சுவாமி படியளப்பதை குறிக்கும் வகையில், அஷ்டமி சப்பர வீதி உலா நடைபெறுகிறது. அதிகாலை சுவாமி பிரியாவிடையுடன் அம்மன் சன்னதியிலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் பெரிய சப்பரத்தில் எழுந்தருளினார். அதையடுத்து, அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். படங்கள்: லட்சுமி