அருள்மிகு ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 7 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனித நீர் கோபுரம், விமானம், மூலவர் சன்னதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நெல்லையப்பர், வேனுவனநாதர், காந்திமதி அம்மாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகள், சமஸ்த வேதமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் நெல்லையப்பர் கோவில் தாமிரசபையாகும்.