பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 82ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 12 ஜோதிர்லிங்கங்களை ஒரே இடத்தில் தரிசிக்க ஏற்பாடு தொடங்கியது. இம்மையத்தில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ஜோதிர்லிங்கங்களை தரிசனம் செய்யலாம். தொடர்ந்து பக்தர்கள் கண்காட்சியை பார்வையிட்டு அங்குள்ள தியான குடிலில் அமர்ந்து தியானம் மேற்கொண்டனர்.