கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நிலையில் 10ஆம் நாள் விழாவான நேற்று மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 9:05 மணி முதல் 9:29 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை காண திருப்பரங்குன்றத்தில் இருந்து ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சமேதராக திருக்கல்யாண மேடையில் தோன்றினார். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், தங்கள் கழுத்தில் புதுத் தாலி அணிந்தனர். திருமணம் முடிந்த ஸ்ரீ மீனாட்சி – சுந்தரேஸ்வரர், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.