மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி மதுரை நகரில் விடிய, விடிய பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பிறகு தல்லாகுளத்தில் இருந்து பெருமாள் கோயில் சென்றார். அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர் என்று போற்றப்படும் சுந்தரராஜப் பெருமாள்.