காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 31 நாள்களில் சயனக் கோலத்தில் அத்திவரதரை சுமார் 50 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். ஜூலை 1--ஆம் தேதி முதல் அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை ஜூலை 1-ஆம் தேதி 1. 00 லட்சம், 2-ஆம் தேதி 70 ஆயிரம், 3-ஆம் தேதி 75 ஆயிரம், 4-ஆம் தேதி 45 ஆயிரம், 5-ஆம் தேதி 85 ஆயிரம், 6-ஆம் தேதி 1. 16 லட்சம், 7-ஆம் தேதி 1. 25 லட்சம், 8-ஆம் தேதி 1. 15 லட்சம், 9-ஆம் தேதி 1. 20 லட்சம், 10-ஆம் தேதி 1. 50 லட்சம், 11-ஆம் தேதி 1. 15 லட்சம், 12-ஆம் தேதி 1. 30 லட்சம், 13-ஆம் தேதி 2. 50 லட்சம், 14-ஆம் தேதி 1. 50 லட்சம், 15-ஆம் தேதி 1. 25 லட்சம், 16-ஆம் தேதி 1. 20 லட்சம், 17-ஆம் தேதி 1.30 லட்சம், 18-ஆம் தேதி 2.75 லட்சம், 19-ஆம் தேதி 1.50 லட்சம், 20-ஆம் தேதி 1.70 லட்சம், 21-ஆம் தேதி 1.75 லட்சம், 22-ஆம் தேதி 1.50 லட்சம், 23-ஆம் தேதி 1.25 லட்சம், 24-ஆம் தேதி 1.40 லட்சம், 25-ஆம் தேதி 1.32 லட்சம், 26-ஆம் தேதி 2.30 லட்சம், 27-ஆம் தேதி 2.50 லட்சம், 28-ஆம் தேதி 3.00 லட்சம், 29-ஆம் தேதி 2.25 லட்சம், 30-ஆம் தேதி 2.50 லட்சம், 31-ஆம் தேதி 1.50 லட்சம் பேர் வந்து ஸ்ரீ ஆதி அத்திவரதரை தரிசித்து சென்றனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பட்டாச்சாரியார்கள் அளித்த வரவேற்பு.