ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு பால், பன்னீர், தேன், நெய், இளநீர், களபம், சந்தனம், தயிர், குங்குமம், விபூதி, திரவியப்பொடி, எலுமிச்சைபழம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், மஞ்சள், அரிசிமாவு ஆகிய திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.