தினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர்
காஞ்சிபுரத்தில் பழைமை வாய்ந்த, திவ்ய தேசங்களில் ஒன்றாக வரதராஜப்பெருமாள் கோயில் திகழ்கிறது. இங்கு அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயனக் கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். தற்போது வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் தரிசனம் அளித்து வரும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் என லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.
17-ஆவது நாளான புதன்கிழமை அடர் மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வியாழக்கிழமை, 18 ஜூலை 2019
16-ஆவது நாளில் பன்னீர் ரோஜா, பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். (வலது) பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சென்ற பக்தர்கள். - புதன்கிழமை, 17 ஜூலை 2019
15-ஆவது நாளான திங்கள்கிழமை பச்சை, நீல வண்ணப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019
14-ஆவது நீல நிற அங்க வஸ்திரம் கொண்ட தங்க நிறப் பட்டாடை அணிந்து காட்சியளித்த அத்திவரதர். - திங்கள்கிழமை, 15 ஜூலை 2019
13-ஆவது நாளான சனிக்கிழமை மயில் பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019