மகா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் விடிய விடிய வழிபாடு செய்தனர். ஊழிக்காலத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பார்வதிதேவி ஓர் இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபூஜை செய்து மீண்டும் உலகைப் படைக்க வரம் பெற்ற திருநாளே மகாசிவராத்திரி ஆகும். சூரியன், மன்மதன், யமன், சந்திரன், அக்னி பகவான் ஆகியோர் இவ்விரதத்தை அனுஷ்டித்து பேறு பெற்றனர். விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து சக்ராயுதத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.