தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வேதங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற்றன. 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடப்பதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.