மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை முதலே பக்தர்கள் கங்கையில் நீராடி, ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். இறைவனுக்கு பால், தயிர், நெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.