வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில் பகல் பத்து திருநாள் நிறைவடைந்து, நேற்று முதல் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர் நம்பெருமாள் ஆகியோருக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ரத்ன அங்கி, பாண்டியன் கொண்டை உள்ளிட்ட திருவாபரணங்கள், தோளில் கிளி மாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக நம்பெருமாள் வெளியே வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அப்போது, அங்கு பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்திப் பரவசத்துடன் நம்பெருமாளை வழிபட்டனர்.