சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மே 7 தேதி நடைபெற இருந்த மதுரை வைகை ஆற்றில் கள்ளழகா் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டு இன்று மே 8-ஆம் நடைபெற்றது. மண்டூக மகரிஷிக்கு சாபவிமோட்சனம் அளிக்கும் வைபவம், இந்தாண்டு அழகா்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டும் கள்ளழகர் பச்சைப்பட்டு கட்டி தங்கக்குதிரை வாகனம் மீதேறி வந்து தரிசனம் கொடுத்தார்.