அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள சக்தி வாய்ந்த 'ஃபிளாரன்ஸ்' புயல்' கரையைக் கடக்கும்போது, மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "பல ஆண்டுகள் கழித்து கிழக்குக் கடலோரப் பகுதியைத் தாக்கவிருக்கும் மிக மோசமான புயல் இது' என்று குறிப்பிட்டிருந்தார்.