தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் முக்தியடைந்தடுத்து, பல்வேறு வகையான சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், ஆனந்தபரவசர் பூங்காவில் 24-ஆவது குருமகா சந்நிதானத்தின் சமாதி திருக்கோயிலுக்கு அருகே 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மதுரை, திருவாவடுதுறை, திருப்பனந்தாள், துழாவூர், குன்றக்குடி, திருப்புகலூர் உள்பட பல்வேறு ஆதீனங்களின் குருமகா சந்நிதானங்கள் பங்கேற்று, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தருமையாதீன குருமகாசந்நிதானத்தின் திருமேனிக்கு மரியாதை செலுத்திய ஆதீனங்களின், ஆன்மிகப் பற்றாளர்கள்.