இயேசு கிறிஸ்து அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம். டிசம்பர் 25-ஆம் தேதி கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில், இயேசு கிறிஸ்து பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் குடில்களை அமைப்பார்கள். பொம்மைகள் களிமண், காகிதக் கூழ் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பொம்மைகள் 3 அங்குல அளவிலிருந்து ஒன்றரை அடி வரை களிமண் பொம்மைகளாகவும், 1 அடி முதல் 2 அடி வரை காகிதக் கூழ் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன.