சீன-இந்திய இளைஞர்களுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத் தினம்
சீன-இந்திய இளைஞர்களுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத் தினம் என்னும் நிகழ்ச்சி ஜனவரி 15ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு, சீன-இந்தியத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகும். இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மனிதப் பரிமாற்ற நிகழ்ச்சிகளின் மூலம், இரு நாட்டு நாகரிகப் பரிமாற்றங்களை முன்னேற்றி, இரு தரப்புறவுக்கு மேலும் நிலையான இயக்காற்றலை ஊட்டி, ஆசிய நாகரிகத்தின் ஒளிவீசும் எதிர்காலத்தைத் தொடர்ச்சியாக உருவாக்குவது, இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இரு நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 இளம் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தகவல்: சீன ஊடகக் குழுமம்