17-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையொட்டி சென்னையில் 17வது ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
சென்னையில் 17-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது, இதில் உறவினர்களை பறிக்கொடுத்தவர்கள் கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர்.
இறந்தவா்களுக்கு உறவினா்கள் தர்ப்பணம் செய்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி பேரலை தாக்கி 17 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், அந்த சுவடுகள் மாறாத நிலையில், மீனவர்கள் நீங்கா நினைவுகளுடன் உறவினா்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய உறவினர்கள்.
லைட் ஹவுஸ் கடற்கரையோரம், மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பாலினை கடலில் கலக்கி நினைவு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த உறவினர்களுக்கு பிடித்த உணவுப்பண்டங்களை வைத்தும் படையலிட்டனர்.