கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படப்பிடிப்பு தொடங்கியது
எம்.ஜி.ஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' படமானது எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசம், முதல்வர் பொறுப்பு என பல காரணங்களால் அவருடைய இந்த விருப்பமும் எண்ணமும் நிறைவேறாமலே அறிவிப்போடு போய்விட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா காலத்தில் அவர் கனவை நனவாக்கும் வகையில், அந்தப் படத்தை அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கத் திட்டமிட்டு, படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனமும் தயாரிக்க, அருள்மூர்த்தி இயக்குகிறார். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் ரஜினி, கமல் உள்பட ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக வந்திருந்த ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு, படத்திற்கான பூஜை போடப்பட்டது.