டைம் லைன் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.செளந்தர், சி.பி.கணேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ரெட் ரம்’. இதில் நாயகியாக சம்யுக்தா ஹர்னாத் நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜை நிகழ்வுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் நாயகன் அசோக் செல்வன், நாயகி சம்யுக்தா ஹர்னாத், இயக்குநர் விக்ரம், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.