நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் தேசியக் கொடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.